Friday, July 14, 2006

பகைவனுக்கு அருளுதல் அவசியமா?

இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிலநடுக்க நிவாரண நிதியாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி உதவியது. அது மட்டுமில்லாமல் நிலநடுக்க நிவாரண நிதியாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிப்பதாக உறுதியளித்தது. அதன்படி ஜூலை 11ம் தேதி, ஆம் ஜூலை 11ம் தேதி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளித்தது. அதே நாளில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை கொல்ல தீவிரவாதிகளுக்கு உதவி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

http://www.adnki.com/index_2Level_English.php?cat=Politics&loid=8.0.320012712&par=0

http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/LSGZ-6RLGYM?OpenDocument

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அதெல்லாம் சரி, நாம் ஏன் பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்?
பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அளவுக்கு நட்பு நாடா?
இல்லையே!!! ஏற்கனெவே மூன்று தடவை போர் புரிந்து பல்லாயிரம் ராணுவ வீரர்களை இழந்துள்ளோமே!!!
ஒரு வேளை பாகிஸ்தான் ஏழை நாடாக இருக்குமோ?
இருக்கலாம் என்று எண்ணும் வேளையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது.

http://www.jpost.com/servlet/Satellite?cid=1150885885707&pagename=JPost%2FJPArticle%2FShowFull

http://www.newsmax.com/archives/articles/2006/6/29/172920.shtml

ஜுன் 30ம் தேதி அமெரிக்க அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. 18 F-16 ரக புதிய விமானங்களை பாகிஸ்தான் வாங்க போகிறது. இதில் மூன்று விஷயங்கள் மிகத்தெளிவாக புரிகிறது.

1) பாகிஸ்தான் ஒரு ஏழை நாடல்ல. 5 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ராணுவ தளவாடங்களை வாங்கும் ஒரு நாடு ஏழை நாடாக இருக்க வாய்ப்பில்லை. வாங்கும் 18 விமானங்களில், 2 விமானத்தைக் குறைத்தாலும் நிவாரணப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யலாம்.

2) சரி, பாகிஸ்தான் ஏன் F-16 ரக விமானம் வாங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கவோ? ரஷ்யாவில் குண்டு போடவோ? அணுகுண்டு தரச் சொல்லி சீனாவை மிரட்டவோ? இல்லையடா, அது உன் மீது போர்தொடுக்க வாங்கப்பட்டவை. உன்னை அழிக்க, உன்னை மண்ணோடு மண்ணாக்க வாங்கப்பட்டவை. இது இந்தியாவில் இருக்கும் கடைசி குடிமனுக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை.

3) இந்திய உதவியால் மிச்சமடைந்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் என்ன செய்யும்? நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போகிறதா? ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன் படுத்த போகிறதா? இல்லையே? எல்லையில் இருக்கு தீவிரவாத கும்பல்களுக்கு பண உதவி செய்து இந்தியாவில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ உதவ போகிறது

பிறகு ஏனய்யா பாகிஸ்தானுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்கவேண்டும்? நான் என் நாட்டிற்காக கட்டிய வரிப்பணம், என் சகோதரியை விதவையாக்கியவர்களுக்கு, என் சகோதரனை எல்லையில் கொல்லத்துடிப்பவனுக்கு ஏன் தர வேண்டும்? எவ்வளவு யோசித்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

நம் பிரதமர் உலகம் போற்றும் பொருளாதார மேதை, அறிவுஜீவி, ஏன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்?
உங்களுக்கு ஒருவேளை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள், புரிந்து கொள்கிறேன்

Tuesday, July 11, 2006

குளோபல் வார்மிங் - நான் என்ன செய்ய முடியும்?

சிறிது நாட்களுக்கு முன் The Day After Tomorrow படம் பார்த்த போது கொஞ்சம் பீதியாகத்தான் இருந்தது. சரி மனித இனத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. என்ன, நாம் நினைப்பதைவிட மிகச் சீக்கிரமாக இம்முடிவு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. உலக நாடுகளும், உலக தலைவர்களும், ஐ.நா சபையும் ஒன்று சேர்ந்து யோசித்து இந்த குளோபல் வார்மிங் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். தனி மனிதனாய் நாம் என்ன செய்ய முடியும் என்று தான் இது நாள் வரை நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

ஆனால் இணையத்தில் இது குறித்து தேடும் போது கிடைத்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதிக அளவு கரியமில வாயுவை(CO2 ) காற்று மண்டலத்தில் கலப்பதே இந்த குளோபல் வார்மிங்கிக்கான காரணம் என்பது நாம் அறிந்ததே. மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை கட்டுப்படுத்தினால் காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் கட்டுப்படுத்தலாம். எனவே நீங்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை முடிந்த வரை சிக்கனப்படுத்தினாலே குளோபல் வார்மிங்கை தடுக்க உம்மால் இயன்றதை செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.


  1. வேலை முடிந்ததும் கணினியை அணைப்பது.
  2. 10 நிமிடத்திற்கு மேல் கணினி செயல்படாமல் இருந்தால், கணினி திரை தானாகவே அணைவது போல் கணினியில் settings செய்தல்.
  3. நடந்து செல்ல முடிந்தால், எரிபொருள் வாகனங்களைத் தவிர்ப்பது
  4. துணி துவைக்கும் இயந்திரத்தில் வெந்நீர் ப்யன்படுத்துவதை தவிர்ப்பது
  5. தேவையற்ற இடங்களில் மின்விளக்குகளை அணைத்தல்.
  6. கதவு மற்றும் சன்னலை திறந்து வைத்து இயற்கை வெளிச்சம் பெறுவது
  7. Incandescent light bulbs பதிலாக Compact fluorescent light bulbs பயன்படுத்துதல்.
  8. நம் வாகனத்தில் சக்கரங்களின் காற்றழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல்.
  9. நம் வாகனத்தை சரியான வேகத்தில் ஓட்டுதல்
  10. நம் வாகனத்திற்கு Emission Test செய்து சரிபார்த்தல்

இது போல் ஒரு தனிமனிதனால் குளோபல் வார்மிங்கை த்டுக்க என்னவெல்லாம் செய்யலாமெனெ சில இணையதளங்களில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கான சுட்டி

http://www.fightglobalwarming.com/page.cfm?tagID=135

http://www.worldwildlife.org/climate/involved/individuals.cfm

இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலகளவில் குளோபல் வார்மிங்கை எதிர் கொள்வதற்கு எடுக்கப்பட்டு வரும் விஷயங்கள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. Greenhouse gases ( விலங்கு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் வாயு ), Green Power (காற்று மின்சாரம், சூரியமின்சாரம்) , எத்தனால் என்று பல மாற்று எரிசக்திகள் குளோபல் வார்மிங்கை கட்டுபடுத்த உபயோகப்படுத்தப்பட போகிறது

இத்தளத்தில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகளை நடைமுறைப்படுத்த நம்மால் இயலும். இதை செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் பணத்தையும் சேமிக்கலாம். உங்கள் கொள்ளுபேரன் விளையாட இவ்வுலகத்தையும் காப்பாற்றி வைக்கலாம். எல்லாம் மிக எளிய விடயங்கள். இதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை செயல்படுத்த அரசாங்கத்தின் தயவு தேவையில்லை, அரசியல்வாதிகளின் பரிந்துரை தேவையில்லை. இதற்குபின்னும் நான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரேஒரு தடவை The Day After Tomorrow படம் பார்க்கவும்.

Monday, July 10, 2006

நிச்சயம் மீண்டும் வெல்வோம்...

இந்தியாவிற்கு கடந்த இரு நாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள் தான்.
ISROவின் GSLV ராக்கெட்டும், DRDOவின் அக்னி III ஏவுகணையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்துள்ளன.

http://msnbc.msn.com/id/13801904/#storyContinued

ISRO மற்றும் DRDOவின் விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர். அல்லும் பகலும் பாடுபட்டு உருவாக்கிய ராக்கெட்டும், ஏவுகணையும் தோல்வியடைந்தால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதே விஞ்ஞானிகள் தான் நம்நாட்டிற்கு அக்னி I, அக்னி II ஏவுகணைகளை கொடுத்தார்கள். இதே விஞ்ஞானிகள் தான் சென்ற முறை GSLV ஐ வெற்றிகரமாக ஏவினார்கள்.

நாட்டின் மிகப்பெரிய அறிவுஜீவிகள் நம் விஞ்ஞானிகள், நிச்சயம் இத்தோல்வியிலிருந்து மீண்டு, இத்தோல்வியிலிருந்து நிறைய கற்று, தவறுகளை களைந்து மீண்டும் சாதனை படைத்து இந்தியாவை வல்லரசு நாடாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.