Friday, September 29, 2006

தேசமா? மதமா?

கடந்த சில நாட்களாக கஷ்மீரில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
2001 ஆம் ஆண்டு நமது இந்திய நாட்டு பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்ப்டும் முகமது அஃப்சல் என்ற ஜெய்-ஷி-முகமது தீவிரவாத இயக்கத் தொடர்பு கொண்ட ஒரு தீவிரவாதியை இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் முறையாக விசாரித்து மரணதண்டனை அளித்துள்ளது

இதில் என்ன தவறு... இந்தியர் அனைவரும் வரவேற்க வேண்டிய விஷயம்தானே. ஆனால் கஷ்மீரில் நடப்பதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது...

http://www.hindu.com/thehindu/holnus/001200609291911.htm

ஒரு தீவிரவாதிக்காக இவ்வளவு போராட்டம்.. இவ்வளவு வன்முறை..
ஏனய்யா.. நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்கவில்லையா? இல்லையே.. அவன் ஒரு முஸ்லீம் என்பதால் தானே.. நான் பல இடங்களில் முஸ்லிம் தீவிரவாதி என முத்திரை குத்தப்படும் போது வருத்தப்பட்டிருக்கிறேன்.. சில தீவிரவாதிகளால் முஸ்லிம் மதத்திற்கே கெட்ட பெயர் என்று யோசித்திருக்கிறேன்...

ஆனால் இன்று நடப்பதை பார்த்தால் என் எண்ணத்தை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் போலுள்ளது.. இங்கு போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் பொதுமக்கள்...இந்தியர்கள்.. நியாயமாக சந்தோஷப் பட வேண்டிய விஷயத்திற்கு கொடி பிடிக்கிறார்கள்...ஏனென்றால் முகமது அஃப்சல் ஒரு முஸ்லீம்... தேசத்திற்கு பிறகுதான் மதம் என்பது உங்களுக்கு புரியவே புரியாதா? முகமது அஃப்சலால் கொல்லப்பட்ட 11 பேரின் குடும்பங்களுக்கு இந்த போராட்டக்காரர்கள் என்ன சமாதானம் சொல்வார்கள்...

இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு, கஷ்மீரின் இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் ஆதரவு. மேலும் வெட்கங்கெட்டதனமாய் மத்தியில் ஆளும் காங்கிரஸின் பதில். நாங்கள் இவர்களின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று. எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த பட்சம் புனித ரமலான் மாததில் தூக்கிலிடாமல் அடுத்த மாததிற்கு ஒத்தி வைக்க வேண்டுமாம். இந்த தீவிரவாதிக்கும் புனித மாததிற்கும் என்ன சம்பந்தம். 11 பேரை கொல்ல காரணமாயிருந்த ஒருவனை அல்லா ஏற்பாரா? அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான் அவர்களின் கடவுள் ஏற்பாரா?

இந்த செய்திகளை படித்து மிக மன உளைச்சலுக்குள்ளானேன். எந்த மதமாயிருந்தால் என்ன.. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்துதானே ஆகவேண்டும். கஷ்மீரில் முகமது அஃப்சலின் மரண தண்டனையை எதிர்க்கும் முஸ்லீம் மக்களுக்கு, தாம் முதலில் இந்தியர் என்பதை உணரும் நாள் என்று தான் வருமோ?