Tuesday, October 17, 2006

இணையத்தில் தமிழிலக்கியம்

அன்பின் வலைப்பதிவாளர்களுக்கு,

பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கவாய்ப்புண்டு. ஏற்கனவே அறிந்தவர்கள் மன்னிக்கவும், அறியாதவர் உடனடியாக கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

http://www.chennailibrary.com/

திரு.கோ.சந்திரசேகரன் எனும் தமிழார்வலரால் நடத்தப்பட்டு வரும் இந்த வலைப்பக்கத்தில் ஏராளமான தமிழ் மின்னூல்கள் இலவசமாக கிடைக்கிறது.
நீங்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியாத எண்ணற்ற அரிய தமிழ் நூல்களை இங்கே மின்னூல்களாக அளித்துள்ளார்கள்.

எட்டுத் தொகை நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருஞானசம்பந்தரின் படைப்புகள்
திரிகூடராசப்பரின் படைப்புகள்
ஸ்ரீகுமரகுருபரரின் படைப்புகள்
சைவ சித்தாந்த நூல்கள்
நீதி நூல்கள்
இலக்கண நூல்கள்
விவேகானந்தர் நூல்கள்
ஔவையாரின் படைப்புகள்
பாரதியாரின் படைப்புகள்
பாரதிதாசன் படைப்புகள்
கல்கியின் படைப்புகள்
அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
மு.வரதராசனாரின் படைப்புகள்
ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்
புதுமைப்பித்தன் படைப்புகள்

அடேங்கப்பா... இன்று ஆரம்பித்தால் வாழ்நாள் முழுதும் படிக்கும் அளவிற்கு எண்ணற்ற அரிய நூல்கள். தமிழ்க்கடல். இத்தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவ்வரிய தமிழ்நூல்கள் எளிதில் கிடைக்க வேண்டுமென்றால் இணையத்தை தவிர வேறு நல்லவழி ஏதுமில்லை.

இந்நூல்கள் குறுந்தகட்டில் வேண்டுமென்றால், மிககுறைந்த விலைக்கே அளிக்கிறார்கள். அவர் வலைப்பக்கத்திலேயே படித்தால் முற்றும் இலவசம்.
இத்துணை நூல்கள் மின்வடிவில் இணையத்தில் ஏற்றுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதற்கு பின்னால் இருக்கும் திரு.கோ.சந்திரசேகரன் உழைப்பும் தமிழார்வமும் வியப்பிற்கும் பாரட்டுதலுக்கும் உரியது.

அனைவரும் தயவுசெய்து இவ்வலைப்பக்கத்திற்கு சென்று முடிந்தவரை அனைத்து நூல்களையும் வாசித்து தமிழறிவை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் நண்பர்களுக்கும் இந்த வலைப்பக்கத்தினை அறிமுகப்படுத்தவும். நன்றி

4 comments:

Anonymous said...

தல அவர பத்தி மதுரல கேட்டுப்பாருங்க. அள்ளிப்போருட்டிருக்காருண்ணா

கோவி.கண்ணன் [GK] said...

மிக பயனுள்ள பதிவு !
பாராட்டுக்கள் !

சேதுக்கரசி said...

உபயோகமான பதிவு.. நன்றி.

ரொம்ப நாள் ஆளைக் காணோமே?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவ்விணைய இலக்கியம் படித்தது மாத்திரமன்றி; அவ்விறுவட்டுக்களும் வாங்கியுள்ளேன். மிகப் பெரிய சேவை . என்னைப் போன்றவர்களுக்கு உள்ள சிறு குறை; பழந்தமிழ் இலக்கியங்கள் உரையில்லாதவை.
அதனால் மீண்டும் யாரையாவது உதவிக்குத் தேடவேண்டியுள்ளது.இறுவட்டுக்களுக்கு உரையும் சேர்ப்பார்களேயானால் சேகரிப்புக்கு மிக உவப்பாக இருக்கும்.
தகவலுக்கு நன்றி